மெயிலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே ஜி எம் போனில் கூப்பிட்டார், " என்ன கண்ணன் சந்தோஷமா"
"சார் ரொம்ப சந்தோஷம்.. நான் போனவாரம் மீட்டிங்கிற்கு அங்க வந்த போது கூட நீங்க எனக்கு சொல்லவில்லையே சார்.. இப்ப ரொம்ப சர்ப்ரைசிங்கா இருக்கு"
" இது ஒரு மாசம் முன்னாலே சேர்மனே எடுத்த முடிவு.. நான் இதிலே ஏதும் செய்யலை.. ஜெர்மனி ப்ராஜெக்ட் ப்ரொஷெக்ஷன் , வொர்க்கிங் ஷீட் இதெல்லாம் யாரு பண்ணினதுனு கேட்டார்.. ஒரு டீம் வொர்க் சார்னு சொன்னேன்.. ஆனாலும் யாரோட டீம்னு கேட்டார்.. உங்க பேர் சொன்னேன்.. அதுக்கப்புறம் அவரே சில தகவல்களை சேகரிச்சிருக்கார்.... ஒரு நாள் என்னிடம் பெர்சனலாகக் கேட்டார்.. நானும் சரின்னேன்.. அத்தினி தான் கண்ணன்.. இது உங்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமஷன் தான்.. யு டிசர்வ் இட்"
"ரொம்ப தாங்கஸ் சார்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு .. அதுவும் ஒரு மாசம் ட்ரெயினிங் அப்படினு சொல்லிருக்காங்க.. இனிமே தான் சார் வீட்டுக்கே சொல்லனும்"
"உங்க எக்சைட்மென்ட் எனக்குப் புரியுது கண்ணன்.. சந்தோஷமா இருங்க.. முதல்ல ஃபேமிலிகிட்ட ஷேர் பண்ணிக்கோங்க.. அடுத்த வாரமே ட்ரெயினிங் ஆரம்பிக்கலாம்.. நீங்க எதுவும் பண்ண வேண்டாம்.. லாஜிஸ்டிக்கல் ஏற்பாடெல்லாம் பார்த்துப்பாங்க.. ஆல் தி பெஸ்ட் எகெய்ன்"
அப்பா போனை எடுத்தார்..
"அப்பா அம்மாவைக் கூப்பிடுங்கப்பா.."
" அம்மாவும் ராஜியும் இங்கெ பக்கத்துல கடை வரைக்கும் போயிருக்காங்கப்பா .. என்ன விஷயம் சொல்லுப்பா"
" நான் அம்மா கிட்ட முதலிலே சொல்லிட்டு, மறுபடி போன் பண்றேன்.. நான் ராஜி செல் ஃபோனுக்குப் பண்றேன்பா"
வீடு திரும்பும் போது, மூவரிடமும் கணக்கில்லாத சந்தோஷம் தெரிந்தது..
"ஏம்பா எத்தனை நாள் ட்ரெயினிங் எந்த ஊர்லே.. "
ரெண்டு மாசம் .. டார்ஜிலிங் பக்கத்துலப்பா.. "
" அக்காமடேஷன் எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா"
"அங்கே ப்ராஜெக்ட் கெஸ்ட் ஹவுஸ் இருக்காம்பா.. நான் பெங்களூர் ப்ராஞ்சுக்கு போன் பண்ணி கேட்டேன்.. அங்கே ஒருத்தர் நாலு மாசம் முன்னாலே போயிருந்தார்.. அவர்கிட்டயே பேசினேன்.. இடம் ரொம்ப நல்லா இருக்குமாம்.. கெஸ்ட் ஹௌஸ்லே எல்லா வசதியும் இருக்குனு சொன்னார். "
"ஏங்க இங்கேர்ந்து டார்ஜிலிங்கிற்கு டைரக்ட் ஃப்ளைட்டா"
"டார்ஜிலிங்கிலே ஏது ஏர்ப்பொர்ட்.. இங்கேர்ந்து கொல்கத்தா.. அங்கேர்ந்து பக்தோரானு ஊருக்கு ஃப்ளைட் மாறனும்.. அங்கேர்ந்து 120 கிமீ கார்லே போகணுமாம்"
கெஸ்ட் ஹவுசிலே எல்லா வசதியும் இருக்கத்தான் செய்தது.. ரொம்ப விசாலமான அறை.. அங்கேயே சாப்பிடக் கிடைக்கும்படிக்கு ஆள் போட்டிருந்தார்கள்.. அந்த சமையல் ஆசாமிக்கு சமையல் மட்டுமில்லாமல் எல்லாம் தெரிந்திருந்தது.
"சார் உங்களுக்கு நாளையிலிருந்து தானே ஆபிஸ் வேலை தொடங்குகிறது.. இன்றைக்கு நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.. ரூமிலேயே போன் இருக்கிறது.. அங்கே ஒரு சின்ன புத்தகம் இருக்கும்.. அதிலே முக்கியமான் போன் நம்பர் எல்லாம் இருக்கிறது.. என்னுடைய மொபைல் நம்பரும் இருக்கிறது.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம்"
ரூமிலிருந்து மலை, தவழும் மேகம் எல்லாம் நன்றாகத் தெரிகிறது.. டேட்டா கார்டு வேலை செய்யுமா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல், நன்றாகவே வேலை செய்தது.
போனுக்குப் பக்கத்திலே இருந்த சின்ன புத்தகத்தில் அந்த சின்ன ஊரின் எல்லா போன் நம்பரும் இருக்கும் போலிருக்கிறது..
ஒரு பக்கத்திலே கரடி படம் போட்டு நாலு போன் நம்பர் தந்திருந்தார்கள் என்னவெனத் தெரியவில்லை.
மறுநாள் உற்சாகமாகத் தயாரானான்.. ரூமுக்கே காலை
டிபன் வந்தது..
"ஆமாம் அந்த டெலிபோன் புத்தகத்திலே கரடி படம் போட்டிருக்கிறதே என்ன விஷயம்".
"நீங்களும் கவனித்து விட்டீர்களா.. அதொன்றுமில்லை.. இந்தப் பக்கத்து காட்டிலே கரடிகள் இருக்கின்றன.. அவை சமயத்தில் இங்கே வந்துவிடும்.. அவற்றை லாவகமாகப் பிடித்துக் கொண்டு போக இங்கே சில கம்பெனிகள் இருக்கின்றன .. அவர்களின் நம்பர் தான் அது"
"என்னது கரடி வருமா"
"சார் பயப்படாதீர்கள்.. அடிக்கடி வராது.. எப்பவாவது வரும்.. ஆனால் அவர்கள் மிகவும் லாவகமாகப் பிடித்து விடுவார்கள்
முதல் நாள் ட்ரெயினிங்கில் எல்லாம் கரடியாகத் தெரிந்தது.. ஒருவழியாக 6 மணிக்கு முடித்தார்கள்.. ஒரு டப்பா காரிலே கெஸ்ட் ஹவுஸில் இறக்கி விட்டார்கள்.
மெதுவாக மாடிப்படியேறி வந்து ரூம் கதவைத் திறந்தால், சந்தேகமில்லாமல் ஒரு கரடி ஜன்னல் மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
வேர்வை, மூச்சு முட்டுதல், அட்ரிலின் இதெல்லாம் கொஞ்ச நேரம் ஓவர் டைம் செய்தது..
" இதோ பாருங்கள்.. நான் இந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து பேசுகிறேன்.. என் ரூமில் கரடி இருக்கிறது"
" நீங்கள் போகும் போது ஜன்னலைத் திறந்து வைத்து விட்டுப் போனீர்களா"
மறு முனை ஆசாமிக்கு கரடி இங்கிருந்து துரத்தப்படுவதைக் காட்டிலும் கரடி எப்படி வந்தது என்பதில் கவனம் அதிகமிருந்தது
ஒரு வழியாக வருவதாகச் சொல்லி வந்து விட்டான்.. அவன் தனியாக வரவில்லை . சுருக்கு கயிறு, சங்கிலி, துப்பாக்கி, ஒரு பெரிய சைஸ் நாய்..
"ஆமாம் கரடி எங்கே"
"மாடியில் என் ரூமிலே இருக்கிறது"
"ரொம்ப பெரிசா"
"நான் கரடி பார்ப்பது இது இரண்டாம் முறை"
" ஓ இதற்கு முன்பே நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றீர்களா"
" மிஸ்டர் நான் முதலில் கரடியை எங்கள் ஊர் ஜூ விலே பார்த்தேன்"
" ஓ ஐம் சாரி"
ஆமாம் அது தான் துப்பாக்கி வைத்திருக்கின்றீர்களே . பின்னர் ஏன் இந்த கயிறு சுருக்கு சங்கிலி இதெல்லாம்.. ஒரே தரம் சுட்டு வீழ்த்த வேண்டியது தானே"
"சார் கரடியை சுட்டு சாகடித்து விட்டால் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆசாமிகள் என் மீது கேஸ் போடுவார்கள்.. நியாயமாகப் பார்த்தால், இந்த வேலைக்கு அவர்கள் தான் வர வேண்டும்.. போனால் போகிறதென என்னை கரடி பிடிக்க விட்டுருக்கின்றார்கள்"
"அப்புறம் துப்பாக்கி எதற்கு.."
"நீங்கள் நினைப்பது போலில்லை.. இது மயக்க மருந்தை கரடிக்கு செலுத்தும் துப்பாக்கி .. ஜஸ்ட் ட்ராங்க்விலைசர் கன்"
"ஓ இதை வைத்து சுட்டால் கரடி எத்தனை நேரத்தில் மயங்கும்"
"சார் இதென்ன கேள்வி.. சுட்ட உடனே மயங்கியாக வேண்டும்.. நாம் சுட்டு சில நிமிஷங்கள் கழித்து மயங்கம் என்றால் கரடி நம்மை கோபத்தில் தாக்கி விடாதா.. "
"கரெக்ட் கரெக்ட்.. ஆமாம் மருந்து போதுமான அளவு இருக்கா"
"கவலைப்படாதீர்கள்.. எனக்கு இதிலே ஐந்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது.. அதுவுமில்லாமல் இதிலே இப்போ வைத்திருக்கும் மருந்து Etorphine என்று பெயர்.. வழக்கமாக காட்டு யானைகளை மயக்கம் செய்ய சுடுவது.. இந்தக் கரடிகளும் பாருங்கள்.. உயரம் கம்மியாக இருந்தாலும் பருமனாக அதிக பாரம் கொண்டவை பாருங்கள்.. அவைகளுக்கும்.. இப்படி ஸ்ட்ராங்கான மருந்து தேவையாகிறது.."
வந்தவன் காரியக்காரனாக இருக்க வேண்டும்..
"அது தான் இந்த மருந்தால் கரடி மயங்கி விடுமே .. பின்னர் எதற்கு சங்கிலி கயிறு எல்லாம்"
"சார் மயங்கிய கரடியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டா போவது.. தூக்கி ஒரு லாரியில் வைத்து கொண்டு போக வேண்டும்.. "
"லாரி எங்கே"
"லாரி பின்னாலே வந்து கொண்டிருக்கிறது.. நாம் சுட்டு கரடி மயக்கமானவுடன் அதனை சங்கிலி கயிறு எல்லாம் வைத்து கை காலை அசைக்க முடியாத மாதிரி கட்டி விடணும்.. பின்னர் லாரியில் வரும் ஆட்கள் அதை தூக்கிப் போட்டுக் கொண்டு போவார்கள்"
" ஆமாம் இந்த நாய் எதற்கு"
"சொல்கிறேன்.. ஆமாம் நீங்கள் இங்கேயே இருக்கின்றீர்களா.. அல்லது கரடி சுடுவதைப் பார்க்க விருப்பமா"
" விபரீதமாக ஏதும் ஆகிவிடாதே"
" என்ன விபரீதமாக ஆகப் போகிறது.. ரூம் கதவைத் திறக்கப் போகிறோம்.. அதிலிருந்து இரண்டே விநாடிகள் தான்,, நான் சுட்டு விடுவேன்.. பின்னர் அரை மணி நேரம் தான்.. கரடியைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.. உங்கள் ரூம் உங்களுக்கே"
" இன்னுமொரு கரடி வந்தால்"
"அதெல்லாம் வராது.. வாருங்கள் உங்கள் ரூமைக் காண்பியுங்கள்"
"ஆமாம் இந்த நாய் எதற்கு"
" ஓ அதுவா.. சில சமயம் மருந்து வேலை செய்யாமல் போகும் அபாயம் உண்டு.. அந்த சமயம் கரடி பெரும் சப்தம் போட்டுக் கொண்டு.. தாக்க வரும்.. இந்த நாய்க்கு நாங்கள் நல்ல பயிற்சி தந்திருக்கிறோம்"
'என்ன பயிற்சி.... அதுவும் நாய்க்கு கரடி புடிக்கும் இடத்தில்"
"அதுவா.. அந்த சந்தர்ப்பத்தில் கரடி மிகவும் மூர்க்கமாக இருக்கும்.. அதனை வீழ்த்துவது ரொம்ப கஷ்டம் பாருங்கள்.. அதனால் இந்த நாய்க்கு கரடியின் மர்ம ஸ்தானத்தை கவ்விப் பிடிக்கும் படி பயிற்சி தந்திருக்கிறோம்"
"எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.. ஆமாம் உங்கள் பெயர் கூட கேட்டுக் கொள்ளவில்லை.. ஐம் கண்ணன்.. "
“ என் பெயர் ஆதர்ஷ்"
ஆஸ்பத்திரியில் கண்ணன் அரை மயக்கத்தில் இருந்தாலும் , டாக்டரிடம் ஆதர்ஷ் பேசுவது அவனுக்கு லேசாகக் கேட்டது
"அது ஒன்றுமில்லை டாக்டர்.. ரூமுக்குள் போகும் வரைக்கும் ஒன்னுமில்லை.. கரடி ஒன்னும் பண்ணலை.. சுட்ட உடனே மயங்கி விட்டது.. கண்ணன் சார் தான் பெரிசா சப்தம் போட்டு கத்திட்டார்.. இந்த நாய்க்கு சப்தம் வச்சி ட்ரெயின் பண்ணிருந்தமா அதான் இப்படி ஆய்டுச்சு"
(செப்டம்பர் 1 , 2012)
"சார் ரொம்ப சந்தோஷம்.. நான் போனவாரம் மீட்டிங்கிற்கு அங்க வந்த போது கூட நீங்க எனக்கு சொல்லவில்லையே சார்.. இப்ப ரொம்ப சர்ப்ரைசிங்கா இருக்கு"
" இது ஒரு மாசம் முன்னாலே சேர்மனே எடுத்த முடிவு.. நான் இதிலே ஏதும் செய்யலை.. ஜெர்மனி ப்ராஜெக்ட் ப்ரொஷெக்ஷன் , வொர்க்கிங் ஷீட் இதெல்லாம் யாரு பண்ணினதுனு கேட்டார்.. ஒரு டீம் வொர்க் சார்னு சொன்னேன்.. ஆனாலும் யாரோட டீம்னு கேட்டார்.. உங்க பேர் சொன்னேன்.. அதுக்கப்புறம் அவரே சில தகவல்களை சேகரிச்சிருக்கார்.... ஒரு நாள் என்னிடம் பெர்சனலாகக் கேட்டார்.. நானும் சரின்னேன்.. அத்தினி தான் கண்ணன்.. இது உங்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமஷன் தான்.. யு டிசர்வ் இட்"
"ரொம்ப தாங்கஸ் சார்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு .. அதுவும் ஒரு மாசம் ட்ரெயினிங் அப்படினு சொல்லிருக்காங்க.. இனிமே தான் சார் வீட்டுக்கே சொல்லனும்"
"உங்க எக்சைட்மென்ட் எனக்குப் புரியுது கண்ணன்.. சந்தோஷமா இருங்க.. முதல்ல ஃபேமிலிகிட்ட ஷேர் பண்ணிக்கோங்க.. அடுத்த வாரமே ட்ரெயினிங் ஆரம்பிக்கலாம்.. நீங்க எதுவும் பண்ண வேண்டாம்.. லாஜிஸ்டிக்கல் ஏற்பாடெல்லாம் பார்த்துப்பாங்க.. ஆல் தி பெஸ்ட் எகெய்ன்"
அப்பா போனை எடுத்தார்..
"அப்பா அம்மாவைக் கூப்பிடுங்கப்பா.."
" அம்மாவும் ராஜியும் இங்கெ பக்கத்துல கடை வரைக்கும் போயிருக்காங்கப்பா .. என்ன விஷயம் சொல்லுப்பா"
" நான் அம்மா கிட்ட முதலிலே சொல்லிட்டு, மறுபடி போன் பண்றேன்.. நான் ராஜி செல் ஃபோனுக்குப் பண்றேன்பா"
வீடு திரும்பும் போது, மூவரிடமும் கணக்கில்லாத சந்தோஷம் தெரிந்தது..
"ஏம்பா எத்தனை நாள் ட்ரெயினிங் எந்த ஊர்லே.. "
ரெண்டு மாசம் .. டார்ஜிலிங் பக்கத்துலப்பா.. "
" அக்காமடேஷன் எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா"
"அங்கே ப்ராஜெக்ட் கெஸ்ட் ஹவுஸ் இருக்காம்பா.. நான் பெங்களூர் ப்ராஞ்சுக்கு போன் பண்ணி கேட்டேன்.. அங்கே ஒருத்தர் நாலு மாசம் முன்னாலே போயிருந்தார்.. அவர்கிட்டயே பேசினேன்.. இடம் ரொம்ப நல்லா இருக்குமாம்.. கெஸ்ட் ஹௌஸ்லே எல்லா வசதியும் இருக்குனு சொன்னார். "
"ஏங்க இங்கேர்ந்து டார்ஜிலிங்கிற்கு டைரக்ட் ஃப்ளைட்டா"
"டார்ஜிலிங்கிலே ஏது ஏர்ப்பொர்ட்.. இங்கேர்ந்து கொல்கத்தா.. அங்கேர்ந்து பக்தோரானு ஊருக்கு ஃப்ளைட் மாறனும்.. அங்கேர்ந்து 120 கிமீ கார்லே போகணுமாம்"
கெஸ்ட் ஹவுசிலே எல்லா வசதியும் இருக்கத்தான் செய்தது.. ரொம்ப விசாலமான அறை.. அங்கேயே சாப்பிடக் கிடைக்கும்படிக்கு ஆள் போட்டிருந்தார்கள்.. அந்த சமையல் ஆசாமிக்கு சமையல் மட்டுமில்லாமல் எல்லாம் தெரிந்திருந்தது.
"சார் உங்களுக்கு நாளையிலிருந்து தானே ஆபிஸ் வேலை தொடங்குகிறது.. இன்றைக்கு நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.. ரூமிலேயே போன் இருக்கிறது.. அங்கே ஒரு சின்ன புத்தகம் இருக்கும்.. அதிலே முக்கியமான் போன் நம்பர் எல்லாம் இருக்கிறது.. என்னுடைய மொபைல் நம்பரும் இருக்கிறது.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம்"
ரூமிலிருந்து மலை, தவழும் மேகம் எல்லாம் நன்றாகத் தெரிகிறது.. டேட்டா கார்டு வேலை செய்யுமா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல், நன்றாகவே வேலை செய்தது.
போனுக்குப் பக்கத்திலே இருந்த சின்ன புத்தகத்தில் அந்த சின்ன ஊரின் எல்லா போன் நம்பரும் இருக்கும் போலிருக்கிறது..
ஒரு பக்கத்திலே கரடி படம் போட்டு நாலு போன் நம்பர் தந்திருந்தார்கள் என்னவெனத் தெரியவில்லை.
மறுநாள் உற்சாகமாகத் தயாரானான்.. ரூமுக்கே காலை
டிபன் வந்தது..
"ஆமாம் அந்த டெலிபோன் புத்தகத்திலே கரடி படம் போட்டிருக்கிறதே என்ன விஷயம்".
"நீங்களும் கவனித்து விட்டீர்களா.. அதொன்றுமில்லை.. இந்தப் பக்கத்து காட்டிலே கரடிகள் இருக்கின்றன.. அவை சமயத்தில் இங்கே வந்துவிடும்.. அவற்றை லாவகமாகப் பிடித்துக் கொண்டு போக இங்கே சில கம்பெனிகள் இருக்கின்றன .. அவர்களின் நம்பர் தான் அது"
"என்னது கரடி வருமா"
"சார் பயப்படாதீர்கள்.. அடிக்கடி வராது.. எப்பவாவது வரும்.. ஆனால் அவர்கள் மிகவும் லாவகமாகப் பிடித்து விடுவார்கள்
முதல் நாள் ட்ரெயினிங்கில் எல்லாம் கரடியாகத் தெரிந்தது.. ஒருவழியாக 6 மணிக்கு முடித்தார்கள்.. ஒரு டப்பா காரிலே கெஸ்ட் ஹவுஸில் இறக்கி விட்டார்கள்.
மெதுவாக மாடிப்படியேறி வந்து ரூம் கதவைத் திறந்தால், சந்தேகமில்லாமல் ஒரு கரடி ஜன்னல் மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
வேர்வை, மூச்சு முட்டுதல், அட்ரிலின் இதெல்லாம் கொஞ்ச நேரம் ஓவர் டைம் செய்தது..
" இதோ பாருங்கள்.. நான் இந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து பேசுகிறேன்.. என் ரூமில் கரடி இருக்கிறது"
" நீங்கள் போகும் போது ஜன்னலைத் திறந்து வைத்து விட்டுப் போனீர்களா"
மறு முனை ஆசாமிக்கு கரடி இங்கிருந்து துரத்தப்படுவதைக் காட்டிலும் கரடி எப்படி வந்தது என்பதில் கவனம் அதிகமிருந்தது
ஒரு வழியாக வருவதாகச் சொல்லி வந்து விட்டான்.. அவன் தனியாக வரவில்லை . சுருக்கு கயிறு, சங்கிலி, துப்பாக்கி, ஒரு பெரிய சைஸ் நாய்..
"ஆமாம் கரடி எங்கே"
"மாடியில் என் ரூமிலே இருக்கிறது"
"ரொம்ப பெரிசா"
"நான் கரடி பார்ப்பது இது இரண்டாம் முறை"
" ஓ இதற்கு முன்பே நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றீர்களா"
" மிஸ்டர் நான் முதலில் கரடியை எங்கள் ஊர் ஜூ விலே பார்த்தேன்"
" ஓ ஐம் சாரி"
ஆமாம் அது தான் துப்பாக்கி வைத்திருக்கின்றீர்களே . பின்னர் ஏன் இந்த கயிறு சுருக்கு சங்கிலி இதெல்லாம்.. ஒரே தரம் சுட்டு வீழ்த்த வேண்டியது தானே"
"சார் கரடியை சுட்டு சாகடித்து விட்டால் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆசாமிகள் என் மீது கேஸ் போடுவார்கள்.. நியாயமாகப் பார்த்தால், இந்த வேலைக்கு அவர்கள் தான் வர வேண்டும்.. போனால் போகிறதென என்னை கரடி பிடிக்க விட்டுருக்கின்றார்கள்"
"அப்புறம் துப்பாக்கி எதற்கு.."
"நீங்கள் நினைப்பது போலில்லை.. இது மயக்க மருந்தை கரடிக்கு செலுத்தும் துப்பாக்கி .. ஜஸ்ட் ட்ராங்க்விலைசர் கன்"
"ஓ இதை வைத்து சுட்டால் கரடி எத்தனை நேரத்தில் மயங்கும்"
"சார் இதென்ன கேள்வி.. சுட்ட உடனே மயங்கியாக வேண்டும்.. நாம் சுட்டு சில நிமிஷங்கள் கழித்து மயங்கம் என்றால் கரடி நம்மை கோபத்தில் தாக்கி விடாதா.. "
"கரெக்ட் கரெக்ட்.. ஆமாம் மருந்து போதுமான அளவு இருக்கா"
"கவலைப்படாதீர்கள்.. எனக்கு இதிலே ஐந்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது.. அதுவுமில்லாமல் இதிலே இப்போ வைத்திருக்கும் மருந்து Etorphine என்று பெயர்.. வழக்கமாக காட்டு யானைகளை மயக்கம் செய்ய சுடுவது.. இந்தக் கரடிகளும் பாருங்கள்.. உயரம் கம்மியாக இருந்தாலும் பருமனாக அதிக பாரம் கொண்டவை பாருங்கள்.. அவைகளுக்கும்.. இப்படி ஸ்ட்ராங்கான மருந்து தேவையாகிறது.."
வந்தவன் காரியக்காரனாக இருக்க வேண்டும்..
"அது தான் இந்த மருந்தால் கரடி மயங்கி விடுமே .. பின்னர் எதற்கு சங்கிலி கயிறு எல்லாம்"
"சார் மயங்கிய கரடியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டா போவது.. தூக்கி ஒரு லாரியில் வைத்து கொண்டு போக வேண்டும்.. "
"லாரி எங்கே"
"லாரி பின்னாலே வந்து கொண்டிருக்கிறது.. நாம் சுட்டு கரடி மயக்கமானவுடன் அதனை சங்கிலி கயிறு எல்லாம் வைத்து கை காலை அசைக்க முடியாத மாதிரி கட்டி விடணும்.. பின்னர் லாரியில் வரும் ஆட்கள் அதை தூக்கிப் போட்டுக் கொண்டு போவார்கள்"
" ஆமாம் இந்த நாய் எதற்கு"
"சொல்கிறேன்.. ஆமாம் நீங்கள் இங்கேயே இருக்கின்றீர்களா.. அல்லது கரடி சுடுவதைப் பார்க்க விருப்பமா"
" விபரீதமாக ஏதும் ஆகிவிடாதே"
" என்ன விபரீதமாக ஆகப் போகிறது.. ரூம் கதவைத் திறக்கப் போகிறோம்.. அதிலிருந்து இரண்டே விநாடிகள் தான்,, நான் சுட்டு விடுவேன்.. பின்னர் அரை மணி நேரம் தான்.. கரடியைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.. உங்கள் ரூம் உங்களுக்கே"
" இன்னுமொரு கரடி வந்தால்"
"அதெல்லாம் வராது.. வாருங்கள் உங்கள் ரூமைக் காண்பியுங்கள்"
"ஆமாம் இந்த நாய் எதற்கு"
" ஓ அதுவா.. சில சமயம் மருந்து வேலை செய்யாமல் போகும் அபாயம் உண்டு.. அந்த சமயம் கரடி பெரும் சப்தம் போட்டுக் கொண்டு.. தாக்க வரும்.. இந்த நாய்க்கு நாங்கள் நல்ல பயிற்சி தந்திருக்கிறோம்"
'என்ன பயிற்சி.... அதுவும் நாய்க்கு கரடி புடிக்கும் இடத்தில்"
"அதுவா.. அந்த சந்தர்ப்பத்தில் கரடி மிகவும் மூர்க்கமாக இருக்கும்.. அதனை வீழ்த்துவது ரொம்ப கஷ்டம் பாருங்கள்.. அதனால் இந்த நாய்க்கு கரடியின் மர்ம ஸ்தானத்தை கவ்விப் பிடிக்கும் படி பயிற்சி தந்திருக்கிறோம்"
"எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.. ஆமாம் உங்கள் பெயர் கூட கேட்டுக் கொள்ளவில்லை.. ஐம் கண்ணன்.. "
“ என் பெயர் ஆதர்ஷ்"
ஆஸ்பத்திரியில் கண்ணன் அரை மயக்கத்தில் இருந்தாலும் , டாக்டரிடம் ஆதர்ஷ் பேசுவது அவனுக்கு லேசாகக் கேட்டது
"அது ஒன்றுமில்லை டாக்டர்.. ரூமுக்குள் போகும் வரைக்கும் ஒன்னுமில்லை.. கரடி ஒன்னும் பண்ணலை.. சுட்ட உடனே மயங்கி விட்டது.. கண்ணன் சார் தான் பெரிசா சப்தம் போட்டு கத்திட்டார்.. இந்த நாய்க்கு சப்தம் வச்சி ட்ரெயின் பண்ணிருந்தமா அதான் இப்படி ஆய்டுச்சு"
(செப்டம்பர் 1 , 2012)